அரியலூர், ஏப்.29 - அரியலூர் நகராட்சிக்கு ட்பட்ட ஏரிகளில் சித்தேரி மிகப்பெரிய ஏரி. நகரின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக இந்த சித்தேரி விளங்கு வதால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப் பட்டு, பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர் வெல்களில் தண்ணீர் மட்டம் அதிகரித்து, குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு பயன் படுத்தப்பட்டது. தற்போது கோடைகாலமாக இருப்ப தால், இந்த சித்தேரியில் நீர்மட்டம் படிப்படி யாக குறைந்து வந்தது. இந்நிலையில் திங்க ளன்று காலை, ஏரிக்கரையின் ஒரு ஓரத்தில், சமூக விரோதிகள் சிலர் ஏரிக்கரையை உடைத் துள்ளனர். இதனால் ஏரியிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இது தொடர்ந்தால் ஏரியில் உள்ள அனைத்து நீரும் வெளியேற்றப்பட்டு, சித்தேரி நீரின்றி வறண்டு போய்விடும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, வீடுகளில் அமைக் கப்பட்டுள்ள போர்வெல்களில் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகும். உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஏரியி லிருந்து வெளியேறும் நீரை தடுத்து நிறுத்துவ தோடு, ஏரிக்கரையை உடைத்த சமூக விரோ திகளை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியலூர் நகரப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.