தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலவழுத்தூரில் அரசு ஆதி திராவிடர் துறையின் சார்பில் செயல்படும் நடுநிலைப்பள்ளியின் மேற்கூரை சிமெண்ட் ஷீட்டால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தலைவலியால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். பல தருணங்களில் வகுப்புகள் மரத்தடியில் தான் நடைபெறுகிறது. பள்ளியின் சமையற்கூடமும் பழுதடைந்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி பள்ளியை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.