திருச்சிராப்பள்ளி, ஜூன் 11-
திருச்சிராப்பள்ளி தில்லைநகர் சில்வர் லைன் சிறப்பு மருத்துவமனை மற்றும் சில்வர்லைன் கேன்சர் ஹெல்த்கேர் டிரஸ்ட் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத் தான் போட்டி திருச்சிராப்பள்ளியில் நடை பெற்றது.
திருச்சிராப்பள்ளி அண்ணாநகர் உழவர் சந்தை முதல் அண்ணா ஸ்டேடியம் வரை ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பரிசு வழங்கி னார்.
பின்னர் இந்தியன் மெடிக்கல் அசோசி யேஷன் ஹாலில் நடைபெற்ற பத்திரிகையா ளர் சந்திப்பில் பேசிய மருத்துவர்கள் அஷ்ரப், செந்தில்குமார் ஆகியோர், “ புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப் படுத்த முடியும். இந்தியாவில் ஒன்பது லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் ஆறு லட்சம் பேர் இறக்கும் நிலை ஏற்படுகிறது. 60 முதல் 70 சதவிகிதம் பேருக்கு மூன்றாம் நிலையிலேயே புற்று நோய் கண்டுப்பிடிக்கப்படுகிறது.
பெண்கள் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோயால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். இளம் வயதிலேயே தடுப்பு ஊசி போட்டுக்கொள்வதன் மூலம் கருப்பை புற்று நோயைத் தடுக்கலாம்.
உணவுப் பழக்க வழக்கம், போதிய விழப்புணர்வு இல்லாததால் பெண்கள் அதிகம் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்ற னர் என்றனர். பேட்டியின் போது முன்னாள் காவல்துறை அதிகாரி கலியமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.