districts

img

தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் கே.செந்தில் இல்ல புதுமனை புகுவிழா நடைபெற்றது. அப்போது கே.செந்தில், தீக்கதிர் ஆண்டு சந்தா ரூ.2000-ஐ, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ரெ.ஞானசூரியன் ஆகியோரிடம் வழங்கினார். மூத்த தோழர் மெரினா ஆறுமுகம், சிபிஎம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.