districts

img

சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சியில் ஒப்படைத்த வாலிபர்கள்

அறந்தாங்கி, டிச.12 - புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி 27 வார்டுகளை யும், சுமார் 60 ஆயிரம் மக்கள் தொகையையும் கொண்ட மாவட்டத்தின் 2 ஆவது நக ராட்சி. இங்கு பேருந்துநிலையம், கட்டுமாவடி சாலை, புதுக் கோட்டை சாலை, பாரதிதாசன் சாலை, அக்னி பஜார் உள்பட பெரும்பான்மையான சாலை களில் மாடுகள் திரிவதும், இரவு  நேரங்களில் சாலைகளின் நடுவே படுத்து உறங்குவதும் தொடர்கின்றன. இதனால் பொதுமக்களும், பள்ளி குழந் தைகளும் அச்சமடைகின்ற னர். இருசக்கர வாகனங் களில் செல்வோர் மீது மாடு கள் மோதுவதால், விபத்து ஏற் படுகிறது.  இப்படி ஆபத்தான முறை யில் சுற்றித் திரியும் மாடு களை அகற்ற வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைக்கப் பட்டது. எவ்வித நடவடிக்கை யும் எடுக்காததால் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர், செவ்வாயன்று சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து, நகராட்சி நிர்வாகத் திடம் ஒப்படைக்கும் போராட் டத்தை நடத்தினர். அறந்தாங்கி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றியடித தலைவர் கோபால் தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் மகா தீர், மாவட்டச் செயலாளர் குமாரவேல், ஒன்றியச் செய லாளர் பாண்டி கெளதம், பொரு ளாளர் சங்கர் ஆகியோர் பேசி னர்.  மேலும் சாலையில் திரிந்த  மாடுகளைப் பிடித்து நகராட்சி  அதிகாரிகளிடம் ஒப்படைத்த னர். அப்போது, வியாழனன்று (டிச.14) சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கப்படும் என  நகராட்சி அதிகாரிகள் உறுதி யளித்தனர்.