பாபநாசம், ஜூன் 20-
டெல்டா விவசாய பாசனத்திற்காக ஜூன் 12 அன்று மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. இந்த நீர் கல்லணையிலிருந்து ஜூன் 16 அன்று திறந்து விடப் பட்டது.
இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே உம்பளாப்பாடி ஊராட்சி மேட்டுத்தெருவில் காவிரி - அரசலாறு தலைப் பில் ரூ.40 கோடி திட்ட மதிப்பீட்டில், ஆற்றில் இருந்து வாய்க்கால்களுக்கு நீரை பிரித்துத் தர புதிதாக நீர் ஒழுங்கி கட்டி முடிக்கப்பட்டது. இது பயன்பாட்டிற்கு இருந்த நிலையில், வந்தடைந்த காவிரி நீரை வாய்க்கால் களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்து மணி உள்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.