districts

பட்டியலின மக்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்

புதுக்கோட்டை, நவ.6 - பட்டியலின மக்களின் கோரிக்கை களை ஒன்றிய அரசு நிறைவேற்ற வலி யுறுத்தி தலித் உரிமைகளுக்கான போராட்ட ஒருங்கிணைப்புக் குழு  சார்பில் புதுக்கோட்டையில் திங்கள் கிழமை கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. பொதுச் சொத்துகளில் பட்டியலின மக்களும், உரிய பங்கினைப் பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் அம்மக்களிடமே இருப் பதை உறுதிசெய்ய வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறையை அடியோடு ஒழிக்க வேண்டும். அரசு கொள்முதல், ஒப்பந்தங்கள், வணிகம் ஆகியவற்றில் பட்டியலின மக்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும். கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய ஒடுக்குமுறையைத் தடுத்து நிறுத்த வேண்டும். பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு மீட்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கோடிக் கணக்கான மக்களிடம் கையெழுத்துப்  பெற்று குடியரசுத் தலைவரிடம் ஒப்ப டைப்பது என தலித் உரிமைகளுக்கான போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டை  மாவட்டத்தில் 2.5 லட்சம் பேரிடம் கை யெழுத்துப் பெறுவது என தீர்மானித்து திங்கள்கிழமை, புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அதன் தொடக்க  நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வுக்கு ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் சி.ஜீவானந்தம், எஸ். பி.லோகநாதன், டி.சலோமி, க.சுந்தர் ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவரும், கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்ன துரை, புதுக்கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் வை.முத்து ராஜா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விதொச மாநிலச்  செயலாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமை யன், தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, எஸ்.கே.எம். ஒருங்கிணைப்பாளர் மு.மாதவன், இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஜி.எஸ்.தனபதி  மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.