districts

img

பிரகதீஸ்வரர் கோவிவில் ஆடி திருவாதிரை விழா துவங்கியது

அரியலூர், ஆக. 3- அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் ராஜேந்திரசோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை வெள்ளியன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கா.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆடித் திருவாதிரை விழாவில் பரத நாட்டியம், தப்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், கிராமிய நடனம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், பள்ளி மாணவ-மாணவியர் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் காலை முதல் இரவு வரை நடைபெறவுள்ளன.