districts

img

பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர் பரிசை பெற்றனர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கராத்தே போட்டியில், பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களான ரா.ஆதித்யா முதல் பரிசையும், நீ.நித்தியசீலன் மற்றும் ஜ.நஜுபுதீன் இரண்டாம் பரிசையும், மு.அபிஜித் நான்காம் பரிசையும் பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியர் (பொ) செ.ராகவன்துரை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.