districts

img

‘‘புதுமைப் பெண் திட்டம்’’: இரண்டாம் கட்டம் தொடக்கம்

புதுக்கோட்டை, பிப்.8-  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித் திட்டத்தின் சார்பில் ‘புதுமைப் பெண் திட்டம்’ இரண்டாம் கட்டத் தினை புதுன்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை கலையரங் கத்தில் விழா நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட ஆட்சி யர் கவிதா ராமு, கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை ஆகியோர் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கினர்.  நிகழ்ச்சியில் புதுக் கோட்டை நகர்மன்றத் தலை வர் திலகவதி செந்தில், மாவட்ட சமூக நல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு,  துணை இயக்குநர் (சுகாதா ரப்பணிகள்) மரு.ச.இராம் கணேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் சே.மணிவண் ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட் டத்திலுள்ள தமிழ்நாடு டாக்  டர் ஜெ.ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழக கல்லூரியில் மாணவியர் களுக்கு வங்கி பற்று அட்டை களை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும்,மீன்வள பல்கலைக்கழக ஆட்சி  மன்றக்குழு உறுப்பினரு மான  வி.பி.நாகை மாலி வழங்கினார்.   சமூகநலன் மற்றும் மகளின் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் நினைவு புதுமைபெண் திட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாண விகளுக்கு மாதம் ரூ.1000  உதவித்தொகை பெறுவ தற்கான வங்கி பற்று அட்டை  (ATM CARD) கல்லூரிகளில் படிக்கும் 1603 மாணவி களுக்கு வழங்கப்பட்டது.  நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி, கூடுதல் ஆட்சி யர் ம.பிரித்திவிராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்  டனர்.