திருவாரூர், அக்.12 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சிப் பகுதி யில் கொள்ளிடம்-வேதாரண் யம் கூட்டு குடிநீர் திட்டத்திற் காக தோண்டப்பட்ட பள்ளத் தால் தொடர்ந்து விபத்து நடை பெறுகிறது. குழாய் பதிப்புக்கு தோண்டப்பட்டு மோசமாக உள்ள பேரூராட்சியின் 2, 3, 4 ஆகிய வார்டு பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்கள் கள ஆய்வு செய்தனர். கொள்ளிடம் - வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குடவாசல் பகுதி சின்ன மணப் பறவை வழியாக அரசு மருத்து வமனை, பெட்ரோல் பங்க் கடந்து வடக்கு முஸ்லிம், நடுத்தெரு வழி யாக சென்று நன்னிலம் சாலையில் இணைக் கும் வகையில் சாலை ஓரமாக பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ராட்சத குழாய் அமைக்க தோண்டப்பட்ட பணி முடிந்து 2 மாதம் கடந்தும், தற்போது வரை சாலையை சீர் செய்யும் பணி நடைபெறவில்லை. இதனால் மழை பெய்தவுடன் தார்ச்சாலை மண்சாலை யாக மாறி, சேறும் சகதியுமாக உள்ளது. சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தினமும் விழுந்து எழும் அவல நிலை உள்ளது. குழாய் பதிப்பிற்காக சாலை ஓரமாக தோண்டப்பட்ட பள்ளத்தை சீர் செய்ய, குடவாசல் பேரூராட்சி நிர்வாகத்திடம் ரூ. 82 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு பெய்யும் மழையால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், பாதசாரிகள் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் டி.ஜி. சேகர் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி.லெனின், நகரக் குழு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு கள ஆய்வு செய்து, பேரூராட்சி நிர்வாகம் உடனே சாலையை சீர்செய்யும் பணியை துவங்க வேண்டும் என தெரிவித்தனர்.