districts

வெளிப்படைத்தன்மை இல்லாததால் கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை திருப்பி அனுப்பிய பொதுமக்கள்!

 சென்னை, மே 21 -

    மாற்று குடியிருப்பு குறித்து வெளிப் படைத் தன்மை இல்லாததால், கணக் கெடுக்க வந்த அதிகாரிகளை பொது மக்கள் திருப்பி அனுப்பினர். சேப்பாக்கம் வாலாஜா சாலை, பக்கிங்காம் கால்வாய் ஒட்டிய லாக் நகரில் இருந்து 2.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மறு சீரமைப்பு, மேம்பாட்டிற்கானமுன்னோடி  திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

   இத னையொட்டி கால்வாய் கரையோரம் வாழும் மக்களை மாறு குடியமர்வு செய்வ தற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்த முன்னோடி திட்டத்தை வெளிப்படை தன்மையோடு செயல்படுத்த வேண்டும். அதற்கான அறிவிப்புகளை வெளிப்படை தன்மையோடு வெளியிடவேண்டும், கால் வாய் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு சரியான மாற்று வாழ்வாதா ரத்தை ஏற்ப டுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்கட்சியின் வலியுறுத்தி வருகிறது.

   இந்த நிலையில் சனிக்கிழமையன்று (மே 20) லாக் நகர் பகுதியில் அதிகாரிகள்  கணக்கெடுப்பிற்கு வந்தனர். மாற்றுக்  குடியிருப்பு குறித்து சரியானதகவல்கள்  தெரிவிக்காமல் அதிகாரிகள்மழுப்பி உள்ளனர். ஆகையால் மக்கள் கணக்கெ டுப்பிற்கு  ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இதனால் அதிகாரிகள்திரும்பி சென்றனர். இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணிபகுதி பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்திரன் உள்ளிட்டோர்  மக்களை சந்தித்து ஆதரவு  தெரிவித்தனர்.