திருநெல்வேலி, மே 10-
மழைப்பொழிவு, பூக்களின் வரத்து குறைவு உள்ளிட்டவைகளின் காரணமாக வும், தொடர் முகூர்த்த தினங்கள் காரணமா கவும் நெல்லை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
பிச்சிப்பூ சீசன் இல்லாத காரணத்தினா லும், மழைப் பொழிவு அதிகரிப்பதன் கார ணமாகவும் புதன்கிழமை ஒரு கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற் பனையானது. அதேபோல் மல்லிகைப்பூ கிலோ ரூ. 700-க்கு விற்பனை செய்யப் பட்டது. ரோஜா பூக்கள் கட்டு ரூ.100க்கும், கேந்தி கிலோ ரூ.50-க்கும், வாடாமல்லி கிலோ ரூ.40-க்கும், சம்பங்கி கிலோ 80-க்கும் விற்பனை ஆகிறது. வில்வ இலை கட்டு ரூ. 150-க்கும், துளசி கட்டு ரூ. 5-க்கும், பச்சை கட்டு ரூ.5 என்ற விலை யில் விற்பனையானது.