தஞ்சாவூர், நவ.4- செங்கிப்பட்டி பாலத்தின் அடியில், கோழிக் கழிவுகளுக்கு மத்தியில், ஆதர வற்ற நிலையில் கிடந்த, 70 வயது மதிக்கத் தக்க முதியவரை காவல்துறையினர் மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவல ராக பணியாற்றும் ராஜகோபால் மற்றும் காவலர்கள் சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகி யோர், இரு தினங்களுக்கு முன்பு அதி காலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந் தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் கொட்டப்பட்டிருந்த குப்பை, கோழிக் கழிவுகளுக்கு இடையே யாரோ அசைவது போல தெரிந்துள்ளது. இதையடுத்து மூவரும் சென்று பார்த்த போது, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் குப்பைகளுக்கு மத்தியில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்பு அந்த முதியவரை மீட்டு, அவரை குளிக்க வைத்து, ஆடைகள் அணிவித்த காவல்துறையினர் முதியவருக்கு உணவு, குடிநீர் வழங்கி, அப்பகுதியில் உள்ள மருத்து வர்கள் மூலம் தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்த முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனிதாபிமானம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதற்கு சாட்சியாக, காவல்துறையினரின் இச்செயலை பொது மக்கள் பலரும் பாராட்டியுள்ளனர். மேலும், முதியவரை குப்பைக் கழிவுக்கிடையே இருந்து காவல்துறையினர் மீட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.