தஞ்சாவூர், ஜூன் 7-
தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில், மது அருந்தி இறந்தவர்கள் சயனைடு கலந்து குடித்தாக கூறப்படும் நிலையில், நகை தயாரிப்பாளர்களிடம் சயனைடு வாங் கப்பட்டதா என காவல்துறையினர் தின மும், நகைப்பட்டறைக்கு சென்று தொந்த ரவு செய்வதாகவும், வழக்கை திசை மாற்ற முயல்வதாகவும் கூறி, தஞ்சையில் புதன்கிழமை நகை தயாரிப்பு பட்டறை களை அடைத்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர், கீழ அலங்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில், மே 21 அன்று மது குடித்த குப்புசாமி, விவேக் என்ப வர்கள் இறந்தனர். இவர்களை உடற்கூரா ய்வு செய்த மருத்துவர்கள், உடலில் சய னைடு கலந்து இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து, காவல் துறை தீவிர விசா ரணையில் இறங்கினர்.
இதில், நகை தயாரிக்கும் பட்டறை யில் சயனைடு வாங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் காவல்துறையி னர், கடந்த 15 நாட்களுக்கு மேலாக, யார் சயனைடு அவர்களுக்கு வழங்கியது என அடிக்கடி, நகை தயாரிப்பாளர்களின் பட்ட றைக்கு சென்று ஆய்வு நடத்துவதும், விசா ரணை என்ற பெயரில், சிலரை அழைத்து சென்று, அவர்கள் மீது வழக்கு போட திட்ட மிட்டுள்ளதாகவும் கூறி, தஞ்சாவூர் ஐயங் கடை தெருவில், நகை தயாரிப்பாளர்கள் பட்டறைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு, வணிகர் சங்க பேரவையின் நகரத் தலைவர் வாசு, நகை வியாபாரிகள் சங்க செயலாளர் சேகர், நகை தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தற்போது நகை தயாரிப்புக்கான சயனைடு கிடைக்காத நிலை ஏற்பட்டுள் ளது. காவல்துறையினர் பல்வேறு கட்டுப் பாடுகளை விதிப்பதால், தொழில் செய் வது பிரச்சனையாக உள்ளது. இதனால், நகை தொழில் முழுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும் நகைப்பட்டறை உரிமை யாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.