பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பாஜக உறுப்பினரை கைது செய்யக் கோரி விசிக போராட்டம்
புதுக்கோட்டை, பிப்.16 - புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் பட்டியல் சமூக மாணவனை தாக்கிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மழையூர் அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த வலியுறுத்தியும் விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சார்பில் மழையூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மர்ம நபர்கள் சிலர் பெட் ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து விடு தலை சிறுத்தைகள் கட்சியினர் உடனடியாக சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டாட்சியர் ஐஸ்வர்யா நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளி களையும், அதற்குத் தூண்டுதலாக இருந்த பாஜக மேற்கு மாவட்டச் செயலாளர் விஜயகுமாரையும் கைதுசெய்து நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை அருகே முள்ளூர் பிரிவு சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வியாழக் கிழமை போராட்டம் நடத்தினர்.
கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், பிப்.16- கும்பகோணம் மாவட்டமாக செயல்படுவதற்கு அனைத் துத் துறைகளிலும் வசதிகளும் அதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், சில அரசு துறையின் தலைமை இடமாகவும் செயல்பட்டு வருகிற கும்பகோ ணத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து தொ டர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வியாழனன்று கும்பகோணம் நீதிமன்றம் அருகே, கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில், நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே மாவட்ட மாக அறிவிக்க கோரி, தங்கள் பணிகளை புறக்கணித்து ஒருநாள் அடையாள புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருடன் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
தஞ்சாவூர், பிப்.16- பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீயை, மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட் டாட்சியராக அண்மையில் ஜெயஸ்ரீ பொறுப்பேற்றார். அவரை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின், மாவட்டத் துணைத் தலைவர் ஏ.மேனகா, மாவட்ட துணைச் செயலாளர் சி.ஏ.சந்திர பிரகாஷ், சேதுபாவா சத்திரம் ஒன்றியத் தலைவர் ராஜேஷ் கண்ணா, மதுக்கூர் ஒன்றிய தலைவர் எம். பாலசுப்பிரமணியன், மதுக்கூர் ஒன்றிய துணைத் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகி யோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், “மாற்றுத்திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க வேண்டும். மூன்று சக்கர ஸ்கூட்டர் மானியத்தில் வழங்க வேண்டும். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்” என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. அப்போது பட்டுக்கோட்டை வரு வாய் வட்டாட்சியர் த.சுகுமார் உடனிருந்தார்.
மேகதாது அணைக்கு ஆதரவாக செயல்படும் காவிரி ஆணையத் தலைவரை கண்டித்து போராட்டம்
தஞ்சாவூர், பிப்.16- கர்நாடக அரசு கட்டவுள்ள மேகதாது அணைக்கு ஆதர வாக செயல்படும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரை கண்டித்து, அவரது உருவ பொம்மையை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு கட்டவுள்ள மேகதாது அணைக்கு ஆதர வாக செயல்படும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரை கண்டித்து தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு வெள்ளிக்கிழமை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்துக்கு குழுவின் ஒருங்கிணைப் பாளர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். போராட்டத் தில் எஸ்.கே.ஹல்தர் உருவ பொம்மையை எரித்தும், அவரை பதவி விலக வேண்டும் எனவும், ஒன்றிய அரசு, கர்நாடக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தீக்கதிர் செய்தி எதிரொலி பள்ளியில் இருந்த பழுதடைந்த கட்டிடம் இடிப்பு
பாபநாசம், பிப்.16 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாத புரத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் 50 மாணவர்கள் படிக்கின்றனர். இரண்டு ஆசிரி யர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் பழுத டைந்து இருந்த 2 ஓட்டு கட்டிடத்தை இடித்துவிட்டனர். மற்றொரு கட்டிடத்தில் இரண்டு வகுப்பறை மட்டுமே இருப்பதால், உட்கார இடமின்றி மாணவர்கள் படும் அவதி குறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியா னது. இதைத் தொடர்ந்து தற்போது புதிதாக வகுப்பறை கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் பள்ளி வளாகத்தில் பயனின்றி உள்ள ஓடு வேய்ந்த கட்டி டத்தை இடிப்பதுடன், பயன்பாட்டில் உள்ள பள்ளி வகுப் பறை கட்டிடத்தையும் சீரமைக்க வேண்டும். பள்ளியின் காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால், அதை யும் புதிதாக தரமானதாக கட்ட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆழ்குழாய் கிணறுகளில் மின் ஒயர்கள் திருட்டு
விவசாயிகள் வேதனை புதுக்கோட்டை, பிப்.16- கீரமங்கலம் பகுதியில் விவசாய ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து மின் ஒயர்கள் திருடப்படு வதால் விவசாயிகள் மிகுந்த வேதனையிலும், கலக்கத்திலும் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரு கில் உள்ள பனங்குளத்தைச் (கிழக்கு) சேர்ந்த வர் விவசாயி களப்பையா(50). புதன்கிழமை இரவு அவரது தோட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்காக, நீர்மூழ்கி மோட்டாரில் இருந்து ஸ்டாட்டர் வரை பொருத்தப் பட்டிருந்த மின் ஒயர்களை மர்ம நபர்கள் அறுத்து திருடிச் சென்றுள்ளனர். இதேபோல வியாழக்கிழமை செரியலூர் ஜமீன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பெருந்துரை, ரவிச்சந்திரன், ராஜேந்திரன் ஆகிய 3 விவசாயிகளின் தோட்டங்களில் நீர்மூழ்கி மோட்டாரில் இருந்து ஸ்டாட்டர் வரை பொருத்தி இருந்த மின் ஒயர்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஒரே இரவில், ஒரே ஊரில் 3 விவசாயிகளின் தோட்டங்களில் மின் ஒயர்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கீரமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயத்திற்கும், குடிதண்ணீர் தேவைக்கும் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நீர்மூழ்கி மோட்டார்கள் மூலமே பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மூழ்கி மோட்டார்களில் பொருத்தப்பட்டுள்ள மின் ஒயர்களை மர்ம கும்பல் திருடி ஒயரில் உள்ள காப்பர் கம்பிகளை எடுத்து விற்பனை செய்யும் போக்கு அடிக்கடி நடக்கிறது. கடந்த சில வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகளின் ஒயர்கள் திருடப்பட்டு உள்ளன. காவல் நிலையங்களில் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை திருடர்கள் கண்டுபிடிக்கப்பட வில்லை. தொடர்ச்சியாக ஒயர்கள் திருட்டு நடந்து வருவதால் விவசாயிகள் அச்சத்துடன் உள்ளோம். போலீசார் ஒயர் திருடர்களை பிடித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.