தேனி, ஜூன் 10-
கூடலூர் அருகே மன வளர்ச்சி குன்றிய சிறுவ னுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம், கூடலூர் தம்மனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருத் தக்கண்ணன் மகன் அன்னக் கொடி (40).இவர் அதே பகுதி யைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுவன் ஒருவரை தனது வீட்டில் வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார் இது குறித்து சிறுவனின் பெற்றோர் கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பிச்சைப்பாண்டி வழக்கு பதிவு செய்து அன்னக்கொ டியை கைது செய்து சிறை யில் அடைத்தார்.