districts

மனுக் கொடுக்க வந்தவர் தீக்குளிக்க முயற்சி போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

தேனி, ஜூன் 28-

    போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு  கொடுக்க வந்த முன்னாள் பேரூராட்சி திமுக கவுன்சிலர்  தீக்குளிக்க முயன்றது தொடர்பாக காவல்துறையினர், வரு வாய்த்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

    தேனி மாவட்டம், போடி அருகே கீழச்சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் முத்துராஜ் (70).  இவர் 2000 ஆம் ஆண்டு மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி  5 ஆவது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர். இவருக்கு  சொந்தமான தோட்டம் கீழச்சொக்கநாதபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியையும், பாதையை யும் சிலர் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

   இதுகுறித்து போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்பை அகற்றித்தரக் கோரி மனு அளித்துள்ளார். அதன்பேரில் ஆக்கிரமிப்பை அகற்றிய நிலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. நிரந்த தீர்வு காண வலி யுறுத்தி மனு அளிக்க புதன்கிழமை போடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த முத்துராஜ் திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடம்பில் ஊற்றி  தீவைத்தார்.

   உடனே அங்கிருந்த பொதுமக்கள், அலுவலர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் முத்து ராஜூக்கு கண்ணில் லேசான பாதிப்பு ஏற்பட்ட நிலையில்  அவரை போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.