மயிலாடுதுறை, பிப்.13- மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை அரசு உயர் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கோயம்புத்தூ ரில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடத்தப் பட்ட மாநில கலைத் திருவிழா போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தனர். இந்நிலையில், கிராம மக்கள் பள்ளிக்கு சீர்வரிசை எடுத்துச் சென்று மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி னர். இதற்காக மாப்படுகை ரயில்வே கிராசிங் பகுதி யில் நூற்றுக்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த செல வில் பள்ளிக்கு பீரோ, நாற்காலி, தண்ணீர் கேன், கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கி பள்ளிக்கு அளித்த னர். இதில் மாநில போட்டியில் வெற்றி பெற்ற மாண வர்களும் பறை இசைத்தவாறு கலந்து கொண்டனர்.