districts

img

சேதுபாவாசத்திரம் ஒன்றிய மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

தஞ்சாவூர், டிச.25 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியத்தில் ஏராளமானோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.  சரபேந்திர ராஜன்பட்டினம் ஊராட்சி  செம்பருத்தி நகரில் பத்துக்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.  வீரப்பெருமாள், தமிழ்நாடு விவசாயி கள் சங்க ஒன்றியத் தலைவர் வீ.கருப் பையா, ஒன்றியக் குழு உறுப்பினர் கள் ஆர்.எஸ்.வேலுச்சாமி,  பி.பெரி யண்ணன், நாகேந்திரன், சேகர், மல்லிப் பட்டினம் கிளைச் செயலாளர் சுப்பிரம ணியன் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.  கிளைச் செயலாளராக பிரவீன் குமார் தேர்வு செய்யப்பட்டார். அங்குள்ள செம்பருத்தி நகரில், மல்லிப் பட்டினம் துறைமுகம் அமைக்கப்படும் போது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 45 குடும்பத்தினர்,

வனத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருகின்றனர். அவர்க ளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.  வீடு கட்டித்தர வேண்டும்.  புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும். குடி  தண்ணீர், மின்சாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். குடியிருப்பு பகுதி யில் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  இதேபோல் ரெண்டாம்புலிக்காடு ஊராட்சி நெட்டோடை பகுதியில் ஏழு பேர் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். முருகையன் கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இங்கு, குளக்கரையில் குடியிருந்து வரும் 30 குடும்பங்களுக்கும் குடியி ருக்க மனைப்பட்டா வழங்க வேண்டும். இதர தேவையான அடிப்படை வசதி களை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  தொடர்ந்து மரக்காவலசை ஊராட்சி  காரங்குடாவில் பத்துக்கும் மேற்பட் டோர் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். கர்த்தர் கிளைச் செயலாள ராக தேர்வு செய்யப்பட்டார்.

கடைத்தெ ருவில் உள்ள வடிகால் வாய்க்கால், தனி  நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி தர வேண்டும். குடியி ருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் ஒரு வீட்டில்கூட கழிப்பறை இல்லாத நிலை உள்ளது. பொதுமக்கள், பெண்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்ப டுத்தும் அவலநிலை உள்ளது. எனவே,  அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், சம்பந் தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை  சந்தித்து இதுகுறித்து கோரிக்கை விடுத்தனர். புதிய கிளை அமைக்கப் பட்ட மூன்று இடங்களிலும் கட்சிக் கொடி யேற்றி வைக்கப்பட்டது.