தேனி, ஜூன் 25-
தனியார் ஆமினி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதில் பயணியின் உடமைகள் எரிந்து சாம்பலானது.இதற்கு காப்பீட்டு நிறுவனம் மற்றும் பேருந்து உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், கெங்குவார் பட்டியைச் சேர்ந்தவர் தமிழன் மகன் ஸ்டீபன். இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தேனியிலிருந்து இயக்கப் படும் தனியார் ஆம்னி பேருந்தில், சென்னையிலிருந்து தேனிக்குச் வந்துள்ளார். அப்போது, காட்டான் குளம் அருகே பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தில் பேருந்தில் வைத்திருந்த ஸ்டீபனின் ரூ.56 ஆயிரத்து 900 மதிப்பிலான உடைமைகள் எரிந்து சாம்பலா னது.
இதற்கு உரிய இழப்பீடு வழங்கு மாறு பேருந்து பயணத்திற்கு காப்பீடு செய்யப்பட்டிருந்த தனியார் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பேரு ந்து உரிமையாளருக்கு ஸ்டீபன் மனு அளித்திருந்ததாக கூறப்படு கிறது. இதற்கு காப்பீட்டு நிறுவனம், பேருந்து உரிமையாளர் பதில ளிக்காததால், இந்த குறித்து கடந்த 2020, பிப்,ரவரி 10 ம் தேதி தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்டீபன் வழக்கு தாக்கல் செய்தி ருந்தார்.
இந்த வழக்கின் மீது விசா ரணை நடத்திய நுகர்வோர் நீதி மன்ற நீதிபதி சுந்தரம், உறுப்பினர் கள் அசினா, ரவி ஆகியோர் கொண்ட அமர்வு, தனியார் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பேருந்து உரிமை யாளர் சண்முகம் ஆகியோர் பேருந்தில் எரிந்து சாம்பலான ஸ்டீப னின் உடமைகளுக்கு உரியத் தொகை ரூ.56 ஆயிரத்து 900, இழப்பீடாக ரூ.25 ஆயிரம், சேவை குறைபாட்டிற்கு ரூ.20 ஆயிரம், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.