திருச்சிராப்பள்ளி, மார்ச் 22- தளுகை ஊராட்சி நிர்வாகத் தில் தொடர்ந்து தலையிடும் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை தட்டிக் கேட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரும் சிபிஎம் உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளருமான இரா.முத்துக் குமாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை கண்டித் தும் ஊராட்சி மன்ற தலைவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் அவரது கணவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உப்பிலி யபுரம் ஒன்றியக் குழு உறுப்பினர் டி.வி.அன்பழகன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செய லாளர் எம்.ஜெயசீலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ராம நாதன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், மூத்த தோழர் ஆர்.சுப்ரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.ஆனந்தன், எஸ்.பாண்டியன், ஒன்றியச் செயலாளர் இரா.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தளுகை ஊராட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வியின் கணவர் வீரமலை தலையீடு செய்துவந்தார். இதனைத் தட்டிக் கேட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் இரா.முத்துக்குமாரை மிகத் தரக்குறைவாக பேசி அவ ருக்கு கொலை மிரட்டல் விடுத் துள்ளார். அப்பொழுது அங்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் கலைச் செல்வி, என் கணவர்தான் இங்கு தலைவர். எல்லாப் பணிகளையும் அவர்தான் செய்வார் என்று கூறி, நீ எங்கு வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள் என்று ஒரு மையில் பேசினார். இதனையடுத்து அங்கு பர பரப்பான சூழல் நிலவவே அங்கி ருந்து வெளியேறி காவல் உதவி ஆய்வாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு முத்துக்குமார் புகார் அளித்தார். இரண்டு நாட்கள் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத தால் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது துறை ரீதியான நட வடிக்கை மற்றும் அவரது கணவர் மீது கொலைமிரட்டல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.