districts

புதிய தகனமேடை கோரையாறு வழியாக அமைக்கப்படாது பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி

திருச்சிராப்பள்ளி, ஜூலை 7 - திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஏற்கனவே கே.சாத்தனூர் பேரூராட்சி யாக இருந்த போது படுகைக்கு மேற்கே, பஞ்சப்பூருக்கு கிழக்குப் புறம், கோரையாறு மேல்புறத்தில் அமைந்துள்ள மயானம் 216, 238  சர்வே எண்ணில் பரம்பரை, பரம்பரை யாக இடுகாடாக உள்ளது.  இந்த இடுகாட்டை இப்பகுதி மக்கள்  காலம் காலமாக பயன்படுத்தி வரு கின்றனர். தற்போது மேற்கண்ட இடத்தில் மாநகராட்சி சார்பில் மின்  மயானம் அமைக்க பணிகள் நடை பெற்று வருகின்றன. மின் மயானம் அமைக்கப்படும் பட்சத்தில், ஊருக் குள்ளே தான் பிரேதங்கள் எடுத்துச் செல்லப்படும். மேலும் இப்பகுதி மக்களுக்கான சுடுகாடும் பறிபோகும்.  எனவே பஞ்சப்பூர் பகுதியில் மின்  மயானம் அமைக்கும் பணியினை கைவிட்டு, இப்பகுதி மக்களுக்கான மயானத்திற்கு அடிப்படை வசதிகள், தகனமேடை, தகர கொட்டகை அமைத்து தர வேண்டும். இப்பகுதி யில் குண்டும், குழியுமான உள்ள சாலைகளை சீரமைத்து தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதிக்குழு தலைமையில், அப்பகுதி மக்கள் செவ்வாயன்று திருச்சி மாநக ராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து திருச்சி மேற்கு  வருவாய் வட்டாட்சியர் அலுவலகத் தில், வட்டாட்சியர் தலைமையில் திங்க ளன்று மாலை அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சிபிஎம் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி, மாநகராட்சி உதவி ஆணையர், உதவி பொறியாளர், தெற்கு பகுதி வருவாய் ஆய்வாளர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.  பஞ்சப்பூர் கிராமத்தில் அமைய உள்ள எரிவாயு தகனமேடைக்கு செல்லும் பாதையை, பஞ்சப்பூர் கிரா மத்தின் வழியாகவோ மற்றும் செங்குறிச்சி கிராமம் வழியாகவோ அமைக்க கூடாது என தெரிவிக்கப்பட் டது. தகன மேடைக்கு செல்லும் பாதை, காரைக்குடி புறவழிச்சாலை வழி யாகத்தான் அமைக்கப்பட உள்ளது என  மாநகராட்சி அலுவலர்களால் உறுதி யளிக்கப்பட்டது. மேலும் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்ட பின்பு, சாலை  அமைத்துத் தரப்படும் என உறுதியளிக் கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.