திருச்சிராப்பள்ளி, ஏப்.29-
தமிழ்நாடு நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் அருகில் உள்ள கே.சாத்தனூர் கிராமம் கோரையாற்றில் தூர்வாரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார். மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.