தஞ்சாவூர், பிப்.9- ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் 8 கிராம் தங்கம் மற்றும் மக்க ளிடம் முதல்வர் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் வியாழக் கிழமை தஞ்சாவூர் மகா ராஜா மகாலில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் ரூ.7.62 கோ டிக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன. தொ டர்ந்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு களுக்கு, வங்கி பெருங் கடன்களுக்கான காசோ லைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.