திருப்பூர், செப். 23 - திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக நியமிக்கப்பட உள்ள குடிநீர் மதகு திறப் பாளர்கள் மற்றும் காவலர்கள் 128 பேருக்கு தினக்கூலி ரூபாய் 500 வழங் குவது என மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது நகராட்சி நிர்வாக இயக்குனரகம் பிறப்பித்துள்ள அர சாணை படியும், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு படியும் வழங்க வேண் டிய குறைந்தபட்ச தினக்கூலியை விட குறைவானதாகும், மேலும் இது நீதி மன்ற உத்தரவை மீறும் செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமேகலை எதிர்ப்பு தெரிவித்தார். திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட் டம் திங்கள் அன்று மேயர் ந. தினேஷ் குமார் தலைமையில், ஆணையர் பவன் குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் துணை மேயர் ஆர்.பாலசுப்பிர மணியம், மண்டலத் தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சி மாமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
நடந்த பணிகள் கடந்த கூட்டத்திற்கு பின்பு இதுவரை நடைபெற்ற பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் பட்டியலிட்டார். நான்கா வது குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்ற பகுதிகளில் 164 சாலைப் பணிகள் 29 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட் டுள்ளது. 2863 குடிநீர் கசிவுகள் சரி செய் யப்பட்டுள்ளன. 819 தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ முகாம்கள் நடத்தி 3200 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்துள்ளனர். 25 நகர்ப்புற நல்வாழ்வு நிலையங்கள் பொது நிதியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 17 நகர்ப்புற நல் வாழ்வு மையங்களில் எட்டு மருத்துவர் கள் உள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. எனினும் மாநக ராட்சியில் நோய் தொற்று இல்லை. சுமு கமான நிலை உள்ளது. குடிநீர் வினி யோகம் சீராக நடைபெற்று வருகிறது. கோயில் வழி பேருந்து நிலையம் பணி நடைபெற்று வருகிறது. இந்த மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்றுதலில் இருந்து மாநக ராட்சி பள்ளிகளில் 150-க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட்டுள் ளன. மேலும் நான்கு பள்ளிகளில் ரூ. 3 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின் றன. ரூ. ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பீட் டில் சிறு பணிகள் முனைப்போடு செயல் படுத்தி வருகிறோம். மேலும் சொத்து வரியை பொருத்த வரை, கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சி யில் விதிக்கப்படும் வரியுடன்,
திருப்பூர் மாநகராட்சி வரியை ஒப்பிட்டு அறிக்கை தயாரித்து முதலமைச்சர் மற்றும் நக ராட்சி நிர்வாக துறை அமைச்சரின் கவ னத்திற்கு கொண்டு சென்று இருக்கி றோம். இதில் உரிய தீர்வு கண்டு மன்ற உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக் கும் பார்வைக்கு வைக்கப்படும். தெரு நாய்களை கட்டுப்படுத்த பத்தாயிரம் தெரு நாய்களுக்கு தீவிர நோய் தடுப்பு என்ற முறையில் தடுப்பூசி பணி தொடங் கப்பட்டுள்ளது. மேலும் 78 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட் டுள்ளது. இதற்காக புதிய மையங்கள் உரு வாக்கப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி யில் வாடகையை தீர்மானிப்பதற்கு ஒரு புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது, என்று மேயர் தினேஷ்குமார் கூறினார். சிபிஎம் எதிர்ப்பு இதை அடுத்து மன்ற பொருள் வாசிச் கப்பட்டது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமேகலை எழுந்து தீர்மான பொருள் 313 முதல் 318 வரை குடிநீர் மதகு திறப்பாளர்கள் மற்றும் காவலர் கள் அவுட்சோர்சிங் முறையில் நியமிப் பதற்கும், மொத்தம் 128 பணியாளர்க ளுக்கு தினக்கூலி ரூ.500 நிர்ணயிப்ப தற்கும் ஆட்சேபம் தெரிவித்தார். குறிப்பாக அரசாணை 2(டி) எண் 36 படி தினக்கூலி ரூ.500 நிர்ணிப்பதாக தீர் மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ரூ.746 தினக்கூலி கொடுத்தால் கூடுதல் செல வாகும் என்றும் தீர்மானத்தில் குறிப்பி டப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாணையை எதிர்த்து சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை ஆணை பெற்றுள்ளது. மேலும் அரசாணை 2(டி) 62 இன் படி உள்ளாட்சிகளில் அவுட்சோர்சிங் தொழி லாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயித்து வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நகராட்சி நிர்வாக இயக்குன ரகம் நீதிமன்றம் குறிப்பிட்டு இருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என கூறி யுள்ளது. ஆனால் திருப்பூர் மாநகராட்சி நிர் வாகம், நீதிமன்றம் சுட்டிக்காட்டிய உத்த ரவுப்படி ஊதியம் நிர்ணயித்து வழங்கா மல் ரூ.500 தினக்கூலி நிர்ணயித்திருப் பது சென்னை உயர்நீதிமன்ற உத்த ரவை மீறும் செயல் என்று மணிமே கலை கூறினார். எனினும் இதுதான் மாநகராட்சிக் கான வழிகாட்டுதல், எது குறைந்தபட் சம் மதிப்பீடோ அதன்படி தான், அரசாணை 36 படி தான் ஊதியம் நிர்ணயிக்கப்பட் டுள்ளது. வேறு அரசாணை எதுவும் வர வில்லை என்று மேயர் தினேஷ்குமார் பதில் கூறினார். தீர்மான எண் 334 மீது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் எஸ்.ரவிச்சந்திரன் ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் 8.33 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோரி னார். அவுட்சோர்சிங் தொழிலாளர்க ளுக்கு தமிழக முழுவதும் ஒரே மாதிரி நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது என்று மேயர் பதிலளித்தார். அந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கு வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ரவிச்சந்திரன் வலியுறுத்தினார். வீடுக ளில் காலை நேரம் குப்பை வாங்க தாமத மாக வருகின்றனர். காலை 7 மணிக்கு மேல் 9 மணி வரை போய் வாங்க வருவ தால் பலர் வேலைக்கு போய் விடுகின்ற னர் குப்பைகள் தேங்குகின்றன என்று கவுன்சிலர்கள் கூறினர். காலை 6 மணிக்கு பணியை தொடங்க மேயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வெளி நடப்பு பாஜக உறுப்பினர் குணசேகரன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மேயர் ஒன்றிய அரசிடம் ரூபாய் 1000 கோடி வாங்கித் தாருங்கள். உடனே அனைத்து பணிகளையும் செய்யலாம் என்று கூறினார். மத்திய அரசு ஒதுக்கும் நிதியை வெளிப்படுத்துவதில்லை என்று சொல்லி பாஜக குணசேகரன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய் தார். அப்போது மேயர், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு என்ன நிதி ஒதுக்குகி றது ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் தெரி யும் என்று கூறினார். இரண்டாம் மண்டலத் தலைவரின் அழைப்பின் பேரில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் அந்த அலுவலகத் திற்கு சென்று வார்டு பிரச்சனை குறித்து பேசியதற்கு அதிமுக மாமன்ற உறுப்பி னர் எதிர்ப்பு தெரிவித்தார். எனது வார்டு பிரச்சனை குறித்து என்னிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
இப்பிரச்சனையில் வாக்குவாதம் ஏற் பட்டு, அதிமுகவினர் வெளிநடப்பு செய் வதாக கூறி அவையில் இருந்து வெளி யேறினர். டால்டா கலப்படம் காங்கிரஸ் கட்சியின் செந்தில்குமார் கூறுகையில், நகரில் அதிகமாக பால் பூத்கள் உருவாகியுள்ளன. அங்கு பால் உப பொருட்கள் விற்கப்படுகின்றன. அங்கு விற்கப்படும் வெண்ணையை வாங்கி நெய்யாக உருக்கினால், அதிக அளவு டால்டா தான் கிடைக்கிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. எனவே உணவுப் பொருள் ஆய்வு அதி காரிகள் அங்கு ஆய்வு செய்ய வேண்டும் என்றார். மேலும் மிகப் பெரும் பிராண்ட் முடித் திருத்தகங்களில் சாய ஆலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது உட லுக்கு தீங்கு விளைவிக்கும். இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அந் தப் பெரிய நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்றும் செந்தில் குமார் கூறினார். கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமி அம்மாள் பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கட்டி டத்திற்கு வர்ணம் பூச வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ராஜேந் திரன் வலியுறுத்தினார். அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பிரச்சனை, பாதாள சாக்கடை இணைப்பு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப் பினர்.