districts

img

மின் கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி,  ஜூலை 26 - மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங் களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கட்சியின் திருச்சி மாவட்டம் பாலக் கரை பகுதி குழு சார்பில் எடத்தெரு அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு பகுதிச் செயலாளர் சுரேஷ் தலைமை  வகித்தார். திருவெறும்பூர் தாலுகா குழு  மற்றும் பி.எச்.இ.எல் இடைக்குழு சார்பில்  துவாக்குடி பேருந்து நிலையம் அருகே சிபிஎம் திருவெறும்பூர் தாலுகா செயலா ளர் மல்லிகா தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி புறநகர் மாவட்டச் செய லாளர் ஜெயசீலன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பேசினர். மணப்பாறை வட்டம் வையம்பட்டியில் ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். தா.பேட்டை ஒன்றியத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் சேகர் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கந்தர்வகோட்டை தெற்கு, வடக்கு  ஒன்றியச் செயலாளர்கள் வி.ரெத்தின வேல், ஜி.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பி னரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பே ரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை கண்டன உரையாற்றினார்.  அரிமளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.வீ. ராமையா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர்  உரையாற்றினார். ஆதனக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுக் கோட்டை ஒன்றியச் செயலாளர் சி.லட்சா திபதி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னச்சாமி, கே.முகமதலிஜின்னா, டி.சலோமி, சி.மாரிக் கண்ணு உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். அன்னவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஆர். சுப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர்  கண்டன உரையாற்றினார். கீரனூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு குன்றாண்டார் கோவில் ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் சிறப்பு ரையாற்றினார். மன்னார்குடி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர ஒன்றியச் செயலாளர்கள் ஜி.தாயு மானவன், கே.ஜெயபால் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன், மாவட்டக் குழு  உறுப்பினர் ஆறு.பிரகாஷ் கண்டன உரை யாற்றினர். கும்பகோணம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் ஏ. செம்மங்குடி துணை மின்சார வாரியம்  அலுவலகம் முன்பு ஒன்றியச்  செயலாளர் எஸ்.பழனிவேல் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட் டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு  உறுப்பினர் சி.ஜெயபால் கண்டன உரை யாற்றினார்.  கும்பகோணம் ஒன்றியம் சுவாமி மலை கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில்  தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், சிஐடியு மாவட்ட தலைவர் எம்.கண்ணன், ஒன்றியச் செய லாளர் என்.கணேசன் ஆகியோர் உரை யாற்றினர். பாபநாசம் பாபநாசம் தலைமை அஞ்சலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாபநாசம் ஒன்றியச் செயலர் முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு காதர்உசேன் ஆகியோர் பேசினர்.  அரியலூர் அரியலூர் அண்ணாசிலை முன்பு, ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர். திருமானூரில் ஒன்றியச் செயலாளர் ஆர். புனிதன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  துரை.அருணன் கண்டன உரையாற்றினார். தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு கட்சியின் தா.பழூர் ஒன்றிய செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வெங்கடாஜலம், டி.அம்பிகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மயிலாடுதுறை  மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் கடைவீதியில் மாவட்டக் குழு உறுப்பினர் வீ.எம்.சரவணன்  தலைமையில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.பி.மார்க்ஸ், ஒன்றியக்  குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றி னர். குத்தாலம் ஸ்ரீகண்டபுரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் கண்டன உரையாற்றினார். கொள்ளிடம் ஒன்றியம், திருமுல்லைவாசல் பேருந்து  நிலையம் அருகே ஒன்றியச் செயலாளர்  கே.கேசவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ப.மாரியப்பன் உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றியக் குழு சார்பில் தோகைமலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.சக்திவேல், மாவட்டக் குழு உறுப் பினர் பெருமாள் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். கரூர் மாநகரம்  கட்சியின் கரூர் மாநகரக் குழு சார்பில் கரூர் மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மின் வாரிய அலுவலரிடம் வழங்கினர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஜி.ஜீவானந்தம், கரூர் மாநகரச் செய லாளர் எம்.தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  கட்சியின் கரூர் ஒன்றிய குழு சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து வேலா யுதம்பாளையம் கடைவீதியில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.இராஜேந்திரன் தலைமை வகித்தார். புகளூர் நகர்மன்ற உறுப்பினர் அ.இந்து மதி, மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  இ.சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.