districts

img

தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்

தஞ்சாவூர், பிப்.13-  தரைக்கடை வியாபாரிகள் சங் கம் (சிஐடியு) சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.  சாலையோர சிறுகடை விற்ப னையாளர்களுக்கு தேசிய அடை யாள அட்டை வழங்க வேண்டும். சாலையோரம் கடை வைத்து வியா பாரம் நடத்தி வரும், சிறு வியாபாரி கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில், அவர்களை அப்பு றப்படுத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம், ஆட்சிய ரிடம் மனு அளிக்கும் போராட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற் றது.  தஞ்சையில் நடைபெற்ற  போராட்டத்திற்கு தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.மில்லர் பிரபு தலைமை  வகித்தார். மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் நிறைவுரையாற்றினார். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் எஸ். ராஜா ராமன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், மாவட்ட துணைச் செய லாளர் கே.அன்பு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் கொடுக் கப்பட்டது. 

திருச்சிராப்பள்ளி

திருச்சி மாநகர் மாவட்ட சிஐ டியு தரைக்கடை தள்ளுவண்டி, மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட தரைக்கடை சங்க தலைவர் கணே சன் தலைமை தாங்கினார். சிஐ டியு திருச்சி மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், திருச்சி மாவட்ட தரைக்கடை சங்க செயலா ளர் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கரூர்

கரூர் மாவட்டம் குளித்தலை நகர, குளித்தலை பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) சார்  பில் கரூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு சங்கத்தின் தலைவர் எஸ். தவசி தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. ராஜூ, சிபிஎம் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல் வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூர்

அரியலூர் ஆட்சியர் அலுவ லகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யர் பெ.ரமண சரஸ்வதியிடம் தரைக்கடை வியாபாரிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  கற்பகம் தலைமையில் நடைபெற்ற மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) சார்பில் கோரிக்கை களை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.