districts

img

பொதுச் சுவர்களில் ஓவியம் வரையும் பணி தீவிரம்

திருச்சிராப்பள்ளி, மே 21-

   திருச்சி மாநகராட்சி தனியார் நிறுவனங் களை ஒன்றிணைத்து நகரில் உள்ள சாலை  மேம்பாலங்களின் பக்கவாட்டு சுவர்களில்  ஓவியங்கள் வரையும் பணியை தீவிரப் படுத்த உள்ளது.

   டி.வி.எஸ்., சாலை மேம்பாலம். டோல் கேட் உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் மக்களை ஈர்க்கும் வகையில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது.  மன்னார்புரம் சாலை,   சங்கிலியாண்டபுரம் பாலம், மேலப்புதூர் சுரங்கப்பாதை ஆகியவற்றிலும் கருப்பொ ருள் பொதிந்த ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது.  

   சமீபத்தில் ஸ்ரீரங்கம் மற்றும் திருவா னைக்கோயில் சாலை மேம்பாலத்தின் சுவர்களை அழகுபடுத்துவதில் மாநகராட்சி கவனம் செலுத்தியது. கவர்ச்சிகரமான ஓவி யங்கள் வெவ்வேறு கருப்பொருள்கள், பழங் கால மக்களின் வாழ்க்கை முறை மற்றும்  இப்பகுதியின் பாரம்பரியம் மற்றும் கலாச் சாரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகின்றன.

  “பொதுச் சுவர்களில் கவர்ச்சிகரமான ஓவியங்களைப் பார்ப்பது அருமையாக உள்ளது. சுற்றுப்புறத்திற்கும் அழகு சேர்க்கிறது. இந்த நடவடிக்கை தனியார் அமைப்புகள் அரசியல் கட்சிகள் அனுமதி யின்றி ஓவியம் வரைவதில் இருந்து பொதுச்  சுவர்களைக் காப்பாற்றியுள்ளது” என்கிறார் திருவானைக்கோவிலைச் சேர்ந்த எஸ்.மோகன்ராஜ். மக்களின் வரவேற்பைப் பெற்றதால், தனி யார் நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியைத் திரட்டி முக்கிய இடங்க ளிலுள்ள பொதுச்சுவர்களில் ஓவியம் தீட்டு வது விரிவுபடுத்தப்பட உள்ளது.  இது குறித்து மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்திநாதன் கூறியதாவது:

    நகரை அழகு படுத்தவும், பொதுச் சுவர்களை அங்கீகரிக்கப் படாத ஓவியங்களிலிருந்து பாதுகாக்கவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஓவியங்கள் வரையப்பட்ட இடங்களிலெல் லாம் பொதுச்சுவர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளது.  

   இந்தத் திட்டத்தின் கீழ் முடிந்த வரை நகரம் அழகு பெற நடவடிக்கை எடுக்கப் படும் தென்னூரில் உள்ள பாலத்தில் விரை வில் அழகிய ஓவியங்கள் வரையப்படும் என்றார்.