திருச்சிராப்பள்ளி, ஜூன் 14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிற்கு அனுப்பிய மனுவில் தெரிவித்திருப்பதாவது: தமிழக அரசு தனது தேர்தல் வாக்கு றுதியில் கூறியது போல் தமிழகம் முழுவதும் நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடும் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் கடுமையான பொருளாதார சிக்கலில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் குறிப்பாக தினமும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவியாக தமிழக அரசின் இத்திடம் இருக்கிறது. இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் கூடுதலாக இருந்தால் பேருந்தை நிறுத்தாமல் நீண்ட தூரம் தள்ளி பேருந்தை நிறுத்தி இறக்குவதும், ஏறும் பயணிகளை அலைக்கழிப்பது, பயணிக்கும் பெண்களை இலவச பயணம் தானே என அவமதிப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் நடந்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் குழந் தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள், கிரா மங்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் முதியோர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காத காரணத்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்ற னர். குறிப்பாக இலவச பயணம் செய்யும் பெண்கள் சில நடத்துநரால் இழிவாக நடத்தப் படும் நிலையும் உள்ளது. எனவே அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் நோக்கில் செயல்படும் போக்குவரத்து ஊழி யர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி செல்லவும், இலவச பயணம் மற்றும் பள்ளி குழந்தைகள் அரசு பேருந்தை பயன் படுத்தும் சூழலை கணக்கில் கொண்டு காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து களை இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.