districts

img

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! திருவிளையாட்டத்தில் மாபெரும் சுடர் ஓட்டம்

மயிலாடுதுறை, ஜன.17 - மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 25 -க்கும் மேற்பட்ட இடங்களில் பொங்கல் விளை யாட்டு விழா நடைபெற்றது.  தரங்கம்பாடி அருகேயுள்ள திருவிளை யாட்டத்தில் கிளை தலைவர் என்.அறிவர சன் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு, முன்னதாக மாபெரும் சுடர் ஓட்டம் நடை பெற்றது.  பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி சிவன்கோவில் பகுதியிலிருந்து நல்லாடை ரோடு, மெயின் ரோடு, அரும்பாக்கம் வழியாக விழா நடை பெற்ற அரசுப் பள்ளி மைதானத்தில் நிறைவ டைந்த சுடர் ஓட்டத்தை, கலைமகள் கல்வி நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடிய ரசு துவக்கி வைத்தார். சங்கத்தின் கொடியை ஒன்றிய பொரு ளாளர் சாமித்துரை ஏற்றி வைத்தார். சிபிஎம் மாவட்ட செயலாளரும், ஊராட்சியின் முன்னாள்  தலைவருமான பி.சீனிவாசன் சுடரைப் பெற்றுக்கொண்டு விளையாட்டு போட்டி களை துவக்கி வைத்தார்.  வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி  சிங்காரவேலன், ஒன்றியச் செயலாளர் ஐயப்பன்,  முன்னாள் மாநில துணைத் தலைவர் ஏ.ரவிச் சந்திரன், முன்னாள் வட்டச் செயலாளர் கே.பி. மார்க்ஸ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜி. வெண்ணிலா, ஒன்றிய துணைத் தலைவர் கோஸ்மின் உள்ளிட்டோர் விளையாட்டுப் போட்டிகளிலும், கலை நிகழ்ச்சிகளிலும் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பு ரையாற்றினர். நிறைவாக கிளை செயலாளர் எஸ்.மணிகண்டன் நன்றி கூறினார்.