திருவாரூர், ஜூலை 9 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், புத்தகளூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக, வாழ்க்கை ஓம் சரவணபவ இயற்கை வேளாண்மை அறக்கட்டளை சார்பில், ரூ.1.60 லட்சம் செலவில் புதிய கழிவறை கட்டப்பட்டது. கட்டி முடித்த கழிவறை, பள்ளியின் தாளாளர் கலிய பெருமாள், தலைமை ஆசிரியர் மீனாட்சி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சின்டெக்ஸ் தொட்டி அமைத்து தண்ணீர் வசதியுடன் சுகாதாரத்தை பேணும் வகையில், மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு நவீன கழிவறை அமைத்து தந்து உதவிய தனியார் நிறுவனத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மீனாட்சி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் நன்றி தெரி வித்தனர்.