பாபநாசம், ஜன.19- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விரைந்து மீட்க ஒன்றிய அரசு துரித நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 10 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களும் இலங்கை கடற்படையின ரால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களது படகுகளும் மீன் பிடி உப கரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக் கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில், 504 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்ற னர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டின் முதல்வரும், மீனவர் பிரதிநிதிகளும், பிரதமருக்கு பலமுறை கடிதம் மூலமாக கோரிக்கை வைத்தும், எந்த வித பலனும் ஏற்படவில்லை. மீனவர்கள் நலனில் ஒன்றிய அரசு கவனம் செலுத்துவது இல்லை. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது தொடர்கதை யாகி விட்டது. ஒன்றிய அரசின் வெளியுறவு கொள்கை, முழுவதுமாக தோல்வி அடைந்து விட்ட தாகவே கருத வேண்டி இருக்கிறது. மீனவர்க ளின் படகுகளையும், சிறையில் இருப்ப வர்களை மீட்கவும், ஒன்றிய அரசு துரித நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.