புதுக்கோட்டை, ஜூன் 15-
செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் நட வடிக்கை மனித உரிமை மீறல் என தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகு பதி புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி யில், ‘‘புதன்கிழமை இரவு தான் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைத்துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளார். சிறைத்துறையின் விதி களின்படி நாளொன்றுக்கு 3 பேர் மட்டுமே பார்க்க அனு மதிக்க முடியும். மற்றபடி உற வினர்கள், வழக்குரைஞர் கள், மருத்துவர்கள் பார்க்க லாம்.
அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை நீதிமன் றத்தின் மூலம் எதிர்கொண்டு நல்ல தீர்வைப் பெற முடி யும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள் ளார். செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறை யின் நடவடிக்கை மனித உரிமை மீறல். தொடர்ந்து ஓய்வே கொடுக்காமல் 17 மணிநேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ஜன நாயகப் படுகொலை.
எனவேதான், சிபிஐ விசாரணைக்கு முன்பாக மாநில அரசின் அனுமதி பெறும் வகையில், ஏற்கெ னவே வழங்கப்பட்டிருந்த முன் அனுமதி ரத்து செய் யப்பட்டிருக்கிறது.
இந்தச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை விசாரணையும் உட்படும். ஏற்கெனவே, 9 மாநிலங்களில் இந்த நடை முறை உள்ளது. தற்போது 10-ஆவது மாநிலமாக தமிழ் நாடும் அந்த முன் அனுமதி யை ரத்து செய்திருக்கிறது. அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ளவரை முதல்வர் சந்திக்கலாமா என எடப்பாடி பழனிச்சாமி கேட்டுள்ளார். அவரது புத்தி அப்படி, நாங்கள் என்ன செய்ய முடியும்? உடல்நலக் குறைவாக இருக்கும் அமைச்சரை, முதல்வர் சந்திக்கிறார். அங்கே மருத்து வர்களும் இருக்கிறார்கள். காதும் காதும் வைத்து என்ன ரகசியம் பேச முடியும்?
அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் கொடுமைப்படுத்த வேண் டும், அச்சுறுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம். இதன்மூலம் மற்றவர்கள் பயப்படுவார்கள் என நினைக்கிறார்கள். நாங்கள் பயப்பட மாட்டோம்’’ என் றார்.