சோழவரம், மே 21-
சென்னையை அடுத்த சோழவரம் அருகேயுள்ள பள்ளி சூரப்பட்டு கிரா மத்தில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நாய்களை விரட்டி னர். குழந்தையின் பாதி உடல் மட்டுமே இருந்தது. இதனால் அந்த குழந்தை ஆணா?பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சோழவரம் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.குழந்தையை தாய் வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்ற னர்.