districts

img

குன்னியூர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை

திருவாரூர், ஆக.6 - திருவாரூர் ஒன்றியம், குன்னியூர் ஊராட்சியில் மக்கள் கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஏற்றுக்கொண்டு, கோரிக்கைகளை நிறை வேற்றாததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் திருவாரூர்-திருத்து றைப்பூண்டி சாலையில் அமைந்துள்ள குன்னியூரில் செவ்வாயன்று மறியல் போராட் டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி, சிபிஎம் திருவாரூர் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் மற்றும் சிஐடியு மாவட்ட பொருளாளர் இரா. மாலதி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச்  செயலாளர் என்.ராஜாங்கம் மற்றும் ஒன்றியக்  குழு உறுப்பினர்கள், குன்னியூர் கிளை கட்சி  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குன்னியூர் வடக்குதெரு, தெற்குதெரு சாலையை சீர்செய்வதற்காக ஒதுக்கிய நிதியில், சாலை போடாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், ஒன்றிய அரசு திட்டத்தின் மூலம் (ஜல் ஜீவன்) வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர்  குழாய் செயல்படவில்லை. குடிநீர் போர்  பம்பும் செயல்படாமல் உள்ளது. குன்னியூர்,  திருவாசல் குளத்தை தூர்வாரி மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து  வந்த வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல்  அதிகாரிகள், கோரிக்கைகள் அனைத்தை யும் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.