திருச்சிராப்பள்ளி, ஏப்.6- பொதுமக்களுக்கு இடை யூறாகவும், நகரில் வாகனப் போக்குவரத்துக்கு இடை யூறாகவும் இரு சக்கர வாக னங்களில் சாகசம் நடத்து வது, பந்தயம் நடத்துவது இளைஞர்களிடையே பிர பலமாகி வருகிறது. இதனால் அவர்களின் உயிருக்கும் பாதசாரிகளுக்கும் அச்சு றுத்தல் ஏற்படுகிறது. இந்த நிலையில் திருச்சி ராப்பள்ளி மாநகர காவல் துறை ஆணையர் எம்.சத்திய பிரியா கூறியதாவது:- காவல்துறையினர் தொடர்ந்து சோதனை மேற் கொண்டாலும், இரு சக்கர வாகன சாகசங்களும். சட்ட விரோத பந்தயங்களும் அதி கரித்து வருவதால், சாலை விபத்துகள் அதிகரித்து வரு கின்றன. “நாங்கள் நிலைமை யைக் கட்டுப்படுத்த முயற் சித்தாலும், இது போன்ற சாகசங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து கல்வி நிறுவனங்கள் இளைஞர் களுக்கு அறிவுறுத்த வேண் டும். நகரில் நீதிமன்றச் சாலை, பொன்மலை ஜி கார்னர், சென்னை பைபாஸ் சாலை, காவேரி பாலம் முதல் திரு வானைக்காவல், குழுமணி சாலை, அண்ணா ஸ்டேடி யம் முதல் ஜமால் முகமது கல்லூரி மற்றும் பஞ்சாப்பூர் முதல் மாத்தூர் ரிங் ரோடு உட்பட, ஒன்பது பகுதிகள் இரு சக்கர வாகனங்கள் சாக சங்கள் நடைபெறும் பகுதி களாக அடையாளம் காணப் பட்டுள்ளன. இரு சக்கர வாகன சாகசங்களில் ஈடுபடு பவர்கள் மீது செய்பவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும். ரூ. 1,000 அபராதம் விதிக்கப் படும். இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரைவில் விழிப் புணர்வு இயக்கத்தை தொடங்கவுள்ளோம். கடந்த வாரத்தில் நகரத்தில் பத் துக்கும் மேற்பட்ட விபத் துக்கள் மற்றும் கவனக் குறைவாக வாகனம் ஓட்டிய தாக வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. சமீபத்தில், இருசக்கர வாகன சாகசம், வேகமாக வாகனத்தை ஓட் டிய ஐந்து இளைஞர்கள் நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் கடுமையாக எச்ச ரித்து அனுப்பப்பட்டனர் என் றார்.