districts

img

தொடர் காத்திருப்புப் போராட்டம் வெற்றி கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அலுவலர்கள் உறுதி

தஞ்சாவூர், நவ.14- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்தி ரம் ஒன்றியம், இரண்டாம் புலிக்காடு, அழ கியநாயகிபுரம், செம்பருத்தி நகர், ஆண்டிக்காடு, பூவாணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகள் சார்பில், இரண்டாம்புலிக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வியாழக்கிழமை காலை தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.மேனகா தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், ஒன்றி யச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில் குமார், மூத்த நிர்வாகி வழக்குரைஞர் வீ. கருப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.எஸ். வேலுச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  இதில், கட்சி ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள், உறுப்பி னர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.  போராட்டத்தில், இரண்டாம்புலிக்காடு அம்பேத்கர் நகர் சாலையை சீர் செய்ய வேண்டும். செம்பருத்தி நகர் நீர்நிலை புறம்போக்கில் சுமார் 30 வருடங்களாக குடியிருந்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அழகிய நாயகிபுரம், வெள்ளங்குழி குளத்துக் கரை, இரண்டாம் புலிக்காடு, ஆத்துக் கரை செம்பருத்தி நகர் நீர்நிலை, ஆண்டிக்காடு புறம்போக்கு நிலம், வாடகைக் குடியிருப்பு ஆகிய இடங்க ளில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் தர வேண்டும். கூட்டுறவு பால் சங்கம் அமைக்க வேண்டும். நிலமற்ற மக்க ளுக்கு குடிமனைப் பட்டா வழங்கி, கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டித் தர வேண்டும். குடிநீர், சாலை பிரச்ச னையை தீர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது.  இதையடுத்து, அங்கு வந்த வருவாய்  துறையினர், வட்டார வளர்ச்சி அலு வலர்கள், காவல் துறையினர், தொடர்பு டைய ஊராட்சி மன்றத் தலைவர்கள் அரசுத்தரப்பில் கலந்து கொண்டு, பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்த னர். இதனையடுத்து, காத்திருப்பு போராட் டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.