திருவாரூர், மே 17-
ஒன்றிய அரசு நிலம் நீர்நிலை களை பெரும் தொழில் நிறுவனங்க ளுக்கு தாரை வார்க்கும் நில ஒருங்கி ணைப்பு சட்ட மசோதாவை திரும் பப் பெற வலியுறுத்தியும், அரிசி யோடு செரிவூட்டப்பட்ட அரிசியை கலப்பதைக் கைவிட வலியுறுத்தி யும் திருவாரூர் மாவட்டத்தில் திரு வாரூர், திருத்துறைப்பூண்டி, மன் னார்குடி ஆகிய இடங்களில் விவ சாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா அமலானால், நீர் நிலைகள் காணாமல் போகும். 250 ஏக்கருக்கு மேல் தொழில் தொடங்க வேண்டும் என அரசுக்கு விண்ணப்பித்தால், நீர் நிலையைக் கூட கொடுக்கலாம். நிலம் கேட்டவரின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படாது. நிபந்த னைகளுக்கு உட்பட்டு வழங்கப் படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற் காக ஒரு குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவும் அரசு அதிகாரி களைக் கொண்ட குழு தான்.
கிராமங்கள், நகரங்களில் உள்ள நீர் நிலை பொது இடங்கள் இனி இருக்காது. ஏரி, குளங்க ளுக்கு தண்ணீர் வர வாய்ப்பிருக் காது. நீர் நிலைகள் அடங்கியுள்ள பகுதியில் சிறு சிறு விவசாயி களின் நிலங்கள் இருந்தால் அந்த நிலத்தையும் எடுத்து கொள்ள லாம். மொத்தத்தில் இந்த சட்டத் தால் நீர் நிலைக்கும், விவசாய நிலத்துக்கும் தான் பாதிப்பு என்பது குறிப்பிடத்ததக்கது.
திருவாரூர்: திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், மாநிலக்குழு உறுப்பினர் கே. தமிழ்செல்வி. த.ரங்கராஜன், எஸ். கேசவராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி: திருத் துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, எஸ்.சாமி நாதன், கே.உலகநாதன், கே.முரு கேசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மன்னார்குடி: மன்னார்குடி யில் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்டச் பொருளாளர் வி.எஸ்.கலிய பெருமாள், கே.ஆர்.ஜோசப் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அரியலூர்: அரியலூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் மணிவேல், மாவட்டத் தலை வர் செந்தில்வேல், ஒன்றியச் செய லாளர் தியாகராஜன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் உத்திராபதி, சேகர், தனவேல், பல்கீஸ், அமுதா, கிருஷ்ணமூர்த்தி, ஜெயராமன், பழனி, இதயத்துல்லா, ராதா, தர்ம லிங்கம், மணியம்மாள், சொக்க லிங்கம், சூசை, பெரியசாமி, பால சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் இளங்கோவன், ஒன்றியச் செய லாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்: நாகப்பட்டி னம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள ஆயக்காரன்புலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோவை.சுப்பிரமணியன், பி.எஸ். பன்னீர் செல்வம், வெற்றியழகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் ஒன்றியம் சிக் கல் கடை தெரு மற்றும் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியகுடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப் பட்டினம் மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, மேலப்பிடாகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநி லத் துணைத் தலைவர் வி.சுப்பிர மணியன், தலைஞாயிறு ஒன்றியம் கொளப்பாடு ஊராட்சியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
மயிலாடுதுறையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன், மாவட்டச் செய லாளர் எஸ்.துரைராஜ், இராதா கிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை: புதுக் கோட்டையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கங்களின் மாவட்டச் செய லாளர்கள் ஏ.ராமையன், எஸ்.சி. சோமையா ஆகியோர் தலைமை வகித்தனர்.
விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் த. இந்திரஜித் உரையாற்றினார். விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் நிறைவுரை யாற்றினார். எஸ்.பொன்னுச்சாமி, த.செல்வராஜ், எம்.பாலசுந்தர மூர்த்தி, ஏ.எல்.ராசு, த.அன்பழகன், எஸ்.நாராயணசாமி, க.சுந்தர் ராஜன், டி.அம்பலராஜ், மார்க் கண்டேயன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.