அரியலூர், பிப்.25- விவசாயிகளை வஞ்சித்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, காரல் மார்க்ஸின் சிந்தனைகளை விமர்சித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன், துரைஅருணன், டி.அம்பிகா, கந்தசாமி, ஆர்.மணி வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கை யில், விவசாயிகளுக்கு வழங்கி வந்த உரம் மற்றும் உணவு மானியங்களை நிறுத்தியது, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு போதுமான நிதியை ஒதுக்காதது, எல்ஐசி, வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மோசடி செய்த அதானி யை கைது செய்து, அவரது சொத்துக் களை முடக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதியை ஒதுக்கீடு செய்து, பணியை உடனடி யாக தொடக்க வேண்டும் , அரிய லூர் நகராட்சியுடன் அருகிலுள்ள கிரா மங்களை இணைத்து எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அரிய லூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனனைக்கு பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.