அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில், பேட்டரி வாகனம் மூலம் துப்புரவுப் பணியாளர்கள் தெருக்கள் தோறும் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். போதிய வாகனம் இல்லாத நிலையில், புதிதாக 4 பேட்டரி வாகனம் (BOV) வாங்கப்பட்டது. இதனை நகர்மன்ற தலைவர் சிவகுமார், துணைத் தலைவர் கருணாநிதி ஆகியோர் ஒப்பந்ததாரரிடம் வழங்கினார்.