தஞ்சாவூர், ஜூன் 5-
தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10.41 கோடியில் கட்டப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார் என மேயர் சண்.ராம நாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் இடத்தில் புதிதாக ஆம்னி பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலை யில், திங்கள்கிழமை மேயர் சண்.ராமநா தன் ஆம்னி பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்றுள்ள பணி கள் குறித்தும், இனி செய்ய வேண்டிய பணி கள் குறித்தும் ஒப்பந்தகாரரிடம் கேட்டறிந் தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், ‘‘தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை யோரத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப் பட்டு இயக்கப்படுவதால், அங்கு போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து கள் இயக்கப்படும் வகையில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் 25 பேருந்துகள் நிறுத்தலாம். மேலும் முதல் தளம், தரை தளங்களில் கடைகள், ஆம்னி பேருந்துகளின் அலுவலங்கள், பயணிகள் காத்திருப்போர் அறைகள், கழிவறை, பொருட்கள் பாதுகாப்பு அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளது.
இந்த பணிகள் பெரும்பாலும் நிறைவ டைந்துள்ளது. இந்த ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் தமிழக முதல்வர் கவ னத்துக்கு கொண்டு சென்று, அவர் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார்’’ என்றார்.
ஆய்வின் போது துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெக தீசன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.