districts

img

தரகம்பட்டி, குப்பையன்பட்டி, வாலியம்பட்டி, ஊனையூரில் மரகதப் பூஞ்சோலைகள் காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை/கரூர், ஆக.14 - அரசு நிலங்களில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத் தில் குப்பையன்பட்டி, வாலியம்பட்டி, ஊனை யூர்  மரகதப் பூஞ்சோலைகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயி லாக புதன்கிழமை திறந்து வைத்தார்.  குப்பையன்பட்டியில் மாவட்ட ஆட்சியர்  பங்கேற்றார். பின்னர் ஆட்சியர் தெரிவிக் கையில், புதுக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட குப்பையன்பட்டி, குளத்தூர் வட்டத்திற்குட் பட்ட  வாலியம்பட்டி, திருமயம் வட்டத்திற்குட் பட்ட ஊனையூர் ஆகிய கிராமங்கள் தேர்வு  செய்யப்பட்டு, ஒரு கிராமத்திற்கு ரூ.23.818 லட்சம் என்ற விகிதத்தில் மூன்று கிராமங் களுக்கு ரூ.71.454 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மூன்று மரகதப் பூஞ்சோலைகளிலும் மொத்தம் 1,875 எண்ணிக்கையிலான தடி மரங்கள், பழ மரங்கள், ராசி வனம், நிழல் தரும் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. பசுமை நுழைவாயில் அமைத்தல், கம்பி வலை மற்றும் எல் வடிவிலான இரும்பு தூணுடன் கூடிய பாதுகாப்பு வேலி, நடைபாதை அமைத்தல், பூங்காவில் அமரக் கூடிய இருக்கை கள் அமைத்தல் மற்றும் விளம்பர  பலகைகள் நிறுவுதல், பார்வையா ளர்கள் அமர கூடிய நிரந்தர கூடா ரம் போன்ற பணிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. கிராம மக்களுக்கு பொழுது போக்கு, புவி வெப்ப சமநிலைபடுத்தும்  இடமாகவும், உயிரினங்கள் மற்றும் மக்க ளுக்கு தேவையான உணவுகளான பழம்,  தீவனம், தண்ணீர், தடி மரம் தருவது டன், எதிர்காலத்தில் காலநிலை மாற்ற  பாதுகாப்பு சூழல் கிராமங்களுக்கு கிடைக்கும்  வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது” என்றார். மாவட்ட வன அலுவலர் எஸ்.கணேச லிங்கம், வட்டாட்சியர் பரணி, புதுக்கோட்டை  வனச்சரக அலுவலர் மு.சதாசிவம், வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் வேலு, இந்திரா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கரூர் கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் திறக்கப் பட்ட மரகதப் பூஞ்சோலையை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பார்வையிட்டார்.  மாவட்ட வன அலுவலர் சண்முகம் உடனிருந்தார்.