districts

img

சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா வெங்கமேடு அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது

கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா வெங்கமேடு அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. பாரதம் சிலம்பம் அகாடமி நிறுவனர் கலை சுடர்மணி எஸ்.கிருஷ்ணராஜ் வரவேற்று பேசினார். சர்வதேச தடகள வீரரும், தேசிய தடகள பயிற்சியாளருமான டாக்டர் நல் அண்ணாவி, கரூர் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க செயலாளர் கே.சௌந்தரராஜனுக்கு ‘விளையாட்டுச் சுடர்’ விருதை வழங்கி சிறப்புரையாற்றினார்.