districts

அதிமுக வேட்பாளர் அதிக பணம் கொடுத்தாலும் படுதோல்வியைச் சந்திப்பார்

புதுக்கோட்டை, ஏப்.6 - திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் ஓட்டுக்கு  அதிக பணம் கொடுக்கலாம். ஆனால், அவர் தேர்தலில் படுதோல்வியைச் சந்திப்பார் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரி வித்தார். திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை.வைகோவை ஆதரித்து புதுக் கோட்டை சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு  இடங்களிலும் அமைச்சர் எஸ்.ரகுபதி வேட்பாள ருடன் வெள்ளிக்கிழமை சூறாவளி சுற்றுப்பய ணம் செய்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: சுற்றியுள்ள பகுதிகள் புதுக்கோட்டை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளதால் கிராமங்களில் வழங்கப்படும் நூறு நாள் வேலைத்திட்டம் பறிபோகும் என்று திட்ட மிட்டு சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். எங்கள்  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு  வரப்பட்டது. ஊராட்சிகளை மாநகராட்சி களோடு இணைத்தாலும் நூறு நாள் வேலை திட்டம் ஒருபோதும் பறிபோகாது. அதே நேரத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நூறு நாள் வேலை திட்டம் மொத்தமாகப் பறி போகும்.  அதிமுக அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவின் தாமரை மலரவே மலராது. பத்தாண்டு கால ஆட்சியில் அதிமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மக்களை ஏமாற்றினார்கள். தற்போது திருச்சி தொகுதியில் போட்டியிடக் கூடிய அதிமுக வேட்பாளர் ஓட்டுக்கு 2000 ரூபாய் கூட கொடுப்பார். அது மணல் விற்ற  காசு. ஆனால் இந்தியா கூட்டணியில் போட்டி யிடும் மதிமுக வேட்பாளரிடம் காசு இல்லை; ஆனால் அவர் மக்களுக்காக உழைப்பார். எவ்வ ளவு பணத்தைக் கொடுத்தாலும் அதிமுக வேட்பாளர் படுதோல்வியைச் சந்திப்பார். அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், திருச்சியில் பங்களா உள்ளதாக கூறியிருக்கிறார். திருச்சியில் மட்டுமல்ல; பல்வேறு மாநிலங்களிலும் அவருக்கு பங்களா  இருக்கிறது. அவர் ஆதரிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்துவிட்டால் எந்த பங்களாவில் இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர், மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். அதனால்  தீப்பெட்டி சின்னத்திற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.