districts

கேரளாவில் இருந்து தஞ்சாவூர் வழியாக ஆன்மீக சுற்றுலா ரயில்

தென்னக ரயில்வே திட்டம் 

தஞ்சாவூர், ஏப்.24-  

   கேரளாவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் வழியாக ஷீரடி சாய்  பாபா கோவில், சிங்கனாபூர் சனீஸ்வரர் கோவில், நாசிக் திரிம்பகேஷ்வர் கோவில், பந்தர்பூர் பாண்டுரங்கர்கோவில், மந்தரா லயம் ஸ்ரீராகவேந்திரர் சாமி கோவில் என  பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்குச் செல்வ தற்கான சிறப்பு ரயில் சேவை குறித்த அறி விப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள் ளது.  

   இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற் றுலா நிறுவனத்தின் பாரத் கவுரவ் என்ற புண்ணிய தீர்த்த யாத்திரை திட்டத்தின் கீழ் மேற்கிந்திய ஆன்மீகச் சுற்றுலா ரயிலை,  தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்  குவதற்கான அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

   இதன்படி, கேரளா மாநிலம் கொச்சு வள்ளி ரயில் நிலையத்தில் இருந்து ஜூன்  5-ஆம் தேதி காலை 9 மணிக்கு புறப்படும் சுற்றுலா ரயில் (வண்டி எண்:எஸ் இசட்  பி.ஜி.03), அன்றைய தினமே தமிழகத்தின்  செங்கோட்டை, தென்காசி, இராஜபாளை யம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்  கல், திருச்சி வழியாக தஞ்சை ரயில் நிலை யத்திற்கு இரவு 8.25 மணிக்கு வருகிறது.  

   பின்னர் 8.30 மணிக்கு புறப்படும் ரயில் கும்பகோணம் (9.20), மயிலாடுதுறை (9.45), சிதம்பரம், விழுப்புரம், செங் கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வழியாக ஜூன் 7-ஆம் தேதி ஷீரடிக்கு செல்கிறது. 7-ஆம் தேதி காலை 7.25 மணி முதல் மறு நாள் (8-ஆம் தேதி) இரவு 11.30 மணி வரை  ஷீரடி சாய்பாபா கோவில், சிங்கனாபூர் சனீஸ்வரர் கோவில் சுற்றி காட்டப்பட உள்  ளது.  9-ஆம் தேதி நாசிக் திரிம்பகேஷ்வர் கோவிலும், 10-ஆம் தேதி பந்தர்பூர் பாண்டு ரங்கர் கோவிலும், 11-ஆம் தேதி மந்திரால யம் ஸ்ரீராகவேந்திரசாமி கோவிலும் சுற்றி காட்டப்பட உள்ளது. பின்னர் ஜூன் 12-ஆம்  தேதி மதியம் 12.30 மணிக்கு கும்பகோணத்  திற்கும், மதியம் 1.45 மணிக்கு தஞ்சைக்கு திரும்பி வரலாம்.

   இதில் பயணம் மேற்கொள்ள பயணக்  கட்டணம், தங்குமிடம், உள்ளூர் வாகனம்,  தென்னிந்திய உணவு வகைகள், சுற்றுலா வழிகாட்டி, காவலர், குடிநீர் உள்பட அனைத்திற்கும் மூன்றடுக்கு ஏ.சியில் பெரி யவர்களுக்கு ரூ.24 ஆயிரத்து 642-ம், 5  முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு  ரூ.23 ஆயிரத்து 382-ம், ஸ்லீப்பர் வகுப்பில் பெரியவர்களுக்கு ரூ.13 ஆயிரத்து 950-ம்,  5 முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கு ரூ.13 ஆயிரத்து 57-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.