districts

   தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பள்ளி கட்டிடம் திறப்பு

பாபநாசம், ஜூன் 24 -

     தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணப் படுகையில் மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்  பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் திறந்து வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மக்கள், இடையிருப்பு ஊராட்சியில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை  மூட வேண்டும். பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர், பள்ளிக்கு கழிவறை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.