தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் சார்பில் ஆசிரியர் தின விழாவையொட்டி ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது வழங்கும் விழா நடந்தது. அய்யம்பேட்டையில் நடந்த விழாவிற்கு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவிந்தராஜ் பங்கேற்று 23 ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது வழங்கிப் பேசினார்.