தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணை தொழிற்தேர்வு தஞ்சாவூர் ஆட்சியர் அறிவிப்பு
தஞ்சாவூர், பிப்.8 - கைவினைஞர் பயிற்சித்திட்டத்தின் கீழ் 2017-2019-இல் இரண்டாமாண்டு தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர் களுக்கு அகில இந்திய துணை தொழிற்தேர்வு 2024 மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, துணைத்தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சி யாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங் களை 15.02.2024 ஆம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற் பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தி, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி துணைத் தேர்வில் கலந்து கொள்ளலாம். அகில இந்திய தொழிற்தேர்வு மார்ச் 2024 குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற http://skill training.tn.gov.in மற்றும் https://ncvtmis.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக தொலைபேசி எண் 04362-278222 இல் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
சித்தப்பாவை கொன்ற அண்ணன் மகனுக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை, பிப்.9- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பந்துவாக் கோட்டையை சேர்ந்தவர் கணேசன் (55). இவர் அதே ஊரில் உள்ள செல்லியம் மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் இவரது அண்ணன் முத்தையா மகன் சசிகுமார் (32) என்பவருக்கும் கோவில் முன்பு பூக்கடை வைப்பதில் பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 22.8.2021-ஆம் தேதி கோவில் திருவிழாவின் போது சசிகுமார் தான் வைத்திருந்த அருவாளால் கணேசனை சரமாரியாக வெட்டிக்கொன்றார். இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பூரணம் ஜெய ஆனந்த், கொலை செய்த குற்றத்திற்காக சசி குமாருக்கு ஆயுள் தண்ட னையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.