districts

img

சுபம் வித்யா மந்திர் பள்ளியில் தொலைநோக்கி விண்வெளி காட்சி

மயிலாடுதுறை, ஜன.6- மயிலாடுதுறை மாவட் டம் சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளி சாராபாய் விண்வெளி கழகத்தின் சார்பில் அதிநவீன தொலை நோக்கி மூலம் சிறப்பு விண்வெளி காணொளி காட்சி நடைபெற்றது. மாண வர்களால் உருவாக்கப்பட்ட உயர் திறன் கொண்ட தொலைநோக்கி மூலம் கிரகங்களையும், சந்திரன் மற்றும் கோள்களையும் பார்க்கும் நிகழ்ச்சி வெள்ளி யன்று ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. வழிகாட்டியும் இஸ்ரோ விஞ்ஞானியு மான இங்கர்சால், தமிழ்நாடு அறிவியல் பேரவை தலை வர் விழிநாதன், துளிர் மாமா நங்க ராஜேந்திரன், பள்ளி  தாளாளர் சுதீஷ், பள்ளி  முதல்வர் வித்யா, நிர்வாக அதிகாரி அன்பழகன் கலந்து  கொண்டனர்.